ஜார்க்கண்டில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1222 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 1222 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 69860 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மாநிலத்தில் 55697 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 13548 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.