கர்நாடக மாநிலம், மூடுபித்ரி நகராட்சி எம்எல்ஏ உமாநாத் கோடியனுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்..
கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், கரோன பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதற்காக நான் சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன்.
"கடவுள் மற்றும் எனது நண்பர்களின் ஆசீர்வாதத்துடன், விரைவில் தொற்று நோயிலிருந்து மீண்டு வருவேன் என்று நான் நம்புகிறேன்'' என்று அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை செய்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.