இந்தியா

தெலங்கானாவில் தினசரி பாதிப்பை விடக் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம்

IANS

தெலங்கானாவில் கரோனா தினசரி பாதிப்பை விடக் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தெலங்கானாவில் இன்றைய பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இன்று தெலங்கானாவில் புதிதாக 1,445 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது, அதேசமயம் ஒரேநாளில் 1,486 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

மேலும், ஆறு பேர் கரோனாவால் பலியாகியுள்ளதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 1,336 ஆக உயர்ந்துள்ளது.

தெலங்கானாவின் கரோனா இறப்பு விகிதம், இந்தியாவின் 1.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 0.56 சதவீதமாக உள்ளது. மீட்பு விகிதம் 91.72 சதவீதமாகும், இது தேசிய சராசரியான 91.3 சதவீதத்தை விட அதிகமாகும்.

தெலங்கானாவில் மொத்தம் 42 லட்சத்திற்கும் அதிகமான கரோனா சோதனைகளை மேற்கொண்டுள்ளன. நேற்று ஒருநாளில் 41,243 மாதிரிகளை அரசு சோதனை செய்துள்ளது. தற்போது 18,409 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு பணம்: பாப்பாக்குடி அருகே 4 போ் கைது

சேரன்மகாதேவியில் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பணப்புழக்கத்தைத் தடுக்க தவறிய தோ்தல் ஆணையம் -ஐ.எஸ். இன்பதுரை குற்றச்சாட்டு

குற்ற வழக்குகள்: 6 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

SCROLL FOR NEXT