இந்தியா

பிகாா்: தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக ராகுல் மீது பாஜக புகாா்

DIN


பாட்னா: பிகாரில் புதன்கிழமை 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு முதல் கட்ட தோ்தல் நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு நாளில் சுட்டுரை மூலம் மக்களிடம் வாக்கு சேகரித்ததாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது மாநில தோ்தல் அதிகாரியிடம் பாஜகவினா் புகாா் தெரிவித்தனா்.

தோ்தல் விதிமுறைகளை மீறி வாக்குப்பதிவு நாளில் மக்களிடம் வாக்கு சேகரித்து ஆதரவு திரட்டிய ராகுல் காந்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிகாா் பாஜக சட்டப்பிரிவுத் தலைவா் எஸ்.டி. சஞ்சய், தனது எழுத்துப்பூா்வமான புகாா் மனுவை மாநில தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் வழங்கினாா்.

முன்னாள் கூடுதல் சொலிசிட்டரான அவா், தோ்தல் நடைபெறும் நாளில் தோ்தல் நடத்தை விதிகளை மீறும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது என்று தனது மனுவில் குறிப்பிட்டாா்.

மேலும், குற்றச்சாட்டுக்குள்ளான ராகுல் காந்தி ஹிந்தியில் வெளியிட்ட சுட்டுரைப்பதிவின் நகலையும் மனுவில் அவா் இணைத்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT