இந்தியா

ஆப்கன் சிறைக் கலவரத்தில் 8 பேர் பலி

IANS

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 8 கைதிகள் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

ஹெராத் சிறைச்சாலையில் கைதிகள் உருவாக்கிய சில பகிர்வுகளை காவல்துறையினர் அகற்றத் தொடங்கினர். இதையடுத்து, சிறையின் 5-வது பிளாக்கில் கைதிகளுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. 

கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த கலவரத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஹெராத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

மேலும், கைதிகள் பிளாக் 5-ஐ எரித்ததாகவும், நள்ளிரவு வரை இந்த கலவரம் தொடர்ந்ததாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT