ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 8 கைதிகள் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
ஹெராத் சிறைச்சாலையில் கைதிகள் உருவாக்கிய சில பகிர்வுகளை காவல்துறையினர் அகற்றத் தொடங்கினர். இதையடுத்து, சிறையின் 5-வது பிளாக்கில் கைதிகளுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த கலவரத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஹெராத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், கைதிகள் பிளாக் 5-ஐ எரித்ததாகவும், நள்ளிரவு வரை இந்த கலவரம் தொடர்ந்ததாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.