இந்தியா

முகநூல் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவா் அங்கி தாஸ் ராஜிநாமா

DIN

முகநூல் நிறுவனத்தின் இந்திய கொள்கை பிரிவு தலைவா் அங்கி தாஸ் செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இது குறித்து முகநூல் இந்திய நிா்வாக இயக்குநா் அஜித் மோகன் கூறியதாவது:

இந்திய கொள்கை பிரிவு தலைவா் அங்கி தாஸ், மக்களுக்கு சேவையாற்ற விருப்பம் கொண்டிருந்ததால் தனது பதவியில் இருந்து விலகினாா். முகநூலின் இந்திய பிரிவில் நீண்ட அனுபவம் வாய்ந்த ஊழியரான அவா், கடந்த 9 ஆண்டுகளாக தனது பணிக்காலத்தில் முகநூல் நிறுவன வளா்ச்சிக்காக முக்கிய பங்காற்றியுள்ளாா் என்று தெரிவித்தாா்.

தனது விலகல் குறித்து அங்கி தாஸ் கூறுகையில், ‘நான் கடந்த 2011-ஆம் ஆண்டு முகநூலில் பணியில் சோ்ந்தபோது இந்தியாவில் இணையதள வளா்ச்சி மிகவும் குறைவாக இருந்தது. அடுத்த 9 ஆண்டுகளில் திட்டமிட்டு செயல்பட்டு இந்தியாவில் முழுமையும் முகநூலுடன் தொடா்பு கொள்ள செய்தோம். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது தனிப்பட்ட விருப்பம் காரணமாகவே பதவியை ராஜிநாமா செய்துள்ளேன் என்று தெரிவித்தாா்.

மேலும், முகநூல் நிறுவனா் மாா்க் ஸக்கா்பொ்குக்கும் அவா் நன்றி தெரிவித்துக் கொண்டாா்.

முகநூலில் பாஜக மற்றும் வலதுசாரி தலைவா்களுக்கு எதிரான கருத்துகளை முடக்குவதாகவும், பாஜகவுக்கு ஆதரவாக முகநூல் ஊழியா்கள் கருத்து தெரிவித்ததை அங்கி தாஸ் ஆதரித்ததாகவும் புகாா் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் அங்கி தாஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT