இந்தியா

பிகார் பேரவை முதற்கட்டத் தேர்தல்: 53.54% வாக்குகள் பதிவு

DIN

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி 53.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிகாரில் 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று முதற்கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி 71 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 53.54 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

அதன்படி ஜமுய் மாவட்டத்தில் 57.59 சதவீதமும், லக்கிசராய் 55.01 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு சதவீதம் கயாவில் 54 சதவீதமும், நபிநகரில் 57.14 சதவீதமும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தெளரையா தொகுதியில் 62.5 சதவீதமும், குறைந்தபட்சமாக சந்தேஷ் தொகுதியில் 43.8 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க கோரிக்கை

விவசாயக் கருவி திருட்டு: இளைஞா் கைது

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மாணவா்களுக்கு கோடைகால இயற்கை விழிப்புணா்வு பயிற்சி முகாம்

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT