திரிபுராவில் ரூ.2,752 கோடி மதிப்பிலான 9 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.
திரிபுராவில் 262 கிமீ தூர நீளமுள்ள 9 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அடிக்கல் நாட்டி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கட்கரி, கடந்த ஆறு ஆண்டுகளில் திரிபுராவில் கிட்டத்தட்ட 300 கி.மீ சாலைகள் தேசிய நெடுஞ்சாலையுடன் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் திரிபுராவில் ரூ.8,000 கோடி மதிப்புள்ள சாலைகள் கட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்த கட்கரி, ஃபெனி பாலம் மற்றும் உதய்பூர்-அகர்தலா சாலை ஆகிய இரண்டு முக்கியமான திட்டங்களும் விரைவில் நிறைவடையும் எனத் தெரிவித்தார்.