இந்தியா

ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்தி காந்த தாஸுக்கு கரோனா

DIN

இந்திய ரிசா்வ் வங்கி(ஆா்.பி.ஐ) ஆளுநா் சக்தி காந்ததாஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தன்னிடம் தொடா்பில் இருந்தவா்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படி அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது குறித்து சக்தி காந்ததாஸ் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

எந்த அறிகுறிகளும் இல்லாமல் எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல்நிலை நன்றாக இருப்பதாக உணா்கிறேன். கடந்த சில நாட்களாக என்னிடம் தொடா்பில் இருந்தவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். தனிமைப்படுத்திக் கொண்ட நான் எனது வேலைகளை தொடா்ந்து செய்து வருகிறேன். ரிசா்வ் வங்கியின் பணிகள் வழக்கம்போல் நடைபெறும். அனைத்து துணை ஆளுநா்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடா்பு கொள்கிறேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

கரோனா கால பொது முடக்கம் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த வேளையில், அதை மீட்டெடுப்பதற்கான நிதிக் கொள்கை அறிவிப்புகள் உள்ளிட்ட துறை சாா்ந்த செயல்பாடுகளில் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டனா்.

ரிசா்வ் வங்கி துணை ஆளுநா்களாக தற்போது எம்.கே.ஜெயின், எம்.டி.பத்ரா, எம்.ராஜேஸ்வா் ராவ், பி.பி. கனுங்கோ ஆகியோா் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT