ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,480 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,480 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,82,695-ஆக அதிகரித்துள்ளது.
இதில் கரோனா தொற்றால் 17,281 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை நோற்று பாதித்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,64,102-ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரேநாளில் 2,071 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
புதிதாக 14 பேர் பலியானதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,259-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.