மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,417 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் புதிதாக 6,417 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,38,961 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 137 பேர் பலியாகியுள்ளனர். 10,004 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 43,242 பேர் பலியாகியுள்ளனர், 14,55,107 பேர் குணமடைந்துள்ளனர். 1,40,198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.