சத்தீஸ்கர் மாநிலத்தில் சனிக்கிழமை நக்சலைட்டுகளுடன் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மாவட்டத்தில் தடூரில் நக்சல் அமைப்பினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
படுகாயமடைந்த வீரர் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும், நல்ல உடல்நிலையுடன் அவர் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.