பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிகாரின் சசாரம் பகுதியில் உள்ள பயாடா மைதானத்தில் பிரசாரப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பிசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்க்கு ஆதரவாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிகார் சமீபத்தில் தனது இரண்டு மகன்களையும் இழந்தது. ராம்விலாஸ் பாஸ்வான் தமது இறுதி மூச்சுவரை தன்னுடன் இருந்தவர். அவர் தமது முழு வாழ்க்கையையும் ஏழை மற்றும் பட்டியலின மக்களின் நலனுக்காகவே அர்ப்பணித்தார்.
இதேபோல், பாபு ரகுவன்ஷ் பிரசாத் சிங்கையும் பிகார் இழந்துள்ளது. அவரும் ஏழைகளின் நலக்காக மட்டுமே பணியாற்றி வந்தார். அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.
பிகார் மகன்கள் கால்வான் பள்ளத்தாக்கில் தங்கள் உயிர்களை இழந்து, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் பாரத மாதா தலைநிமிர்ந்து நிற்கிறாள்.
மேலும், புல்வாமா தாக்குதலிலும் பிகார் மாநிலத்தைச் சேர்நத வீரர்கள் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அவர்களது காலடியில் தலைவைத்து நான் மரியாதை செலுத்துகிறேன் என்று கூறினார்.