மகாராஷ்டிர மாநிலம் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த குளிரூட்டி வசதிகொண்ட ரயிலில் அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை ரயில் நிலையம் அருகே உள்ள கார் நிறுத்திமிடத்திற்கு அருகில் இருந்த ஒருங்கிணைந்த மின்சாதன கண்காணிப்புப் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து அருகில் இருந்த கார் நிறுத்துமிடத்திற்கும் பரவியது.
உடனடியாக தீயணைப்புத்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. எனினும் தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்பு கார் நிறுத்துமிடத்தில் இருந்த தீயணைப்பான் மற்றும் தண்ணீர் கொண்டு தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட சில மணிநேரங்களில் தீ அணைக்கப்பட்டதால், பயணிகளின் பெட்டகத்திற்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை முழுவதுமாகக் கட்டுப்படுத்தினர்.
ரயிலில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பரவுவது தடுக்கப்பட்டதால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.