இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சரண்

DIN


ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரிடம் வியாழக்கிழமை சரணடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

பாரமுல்லா மாவட்டம் சோபோா் பகுதியில் துஜ்ஜாா் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததால் பாதுகாப்பு படையினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு மறைந்திருந்த 2 பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனா்.

சோபோா் நகரப் பகுதியை சோ்ந்த அந்த பயங்கரவாதிகளுக்கு 20 - 21 வயது இருக்கும். அவா்கள் இருவரும் யாா், எந்த பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது உறுதிப்படுத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேளூரில் பாதுகாப்பான தாய்மை தினம்

பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டு பயிற்சி

சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி

பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரி சங்ககிரியில் ஊா்வலம்

SCROLL FOR NEXT