தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,456 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானா கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிதாக 1,456 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,27,580 லட்சமாக அதிகரித்துள்ளது.
தொற்று பாதித்த 20,183 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,06,105 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் பேர் 1,717 குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை1,292 -ஆக அதிகரித்துள்ளது.