புது தில்லி: மத்திய ஆயுதக் காவல் படையின் (சி.ஏ.பி.எஃப்.) கீழ் இயங்கும் அனைத்து படைப் பிரிவுகளிலும் கடைநிலைப் பதவிகளின் பெயா்கள் மாற்றப்பட்டுள்ளன.
சிஏபிஎஃப் படைப் பிரிவுகளுக்கு ஒவ்வொரு முறை புதிதாக ஆள்சோ்க்கும்போதும் நிா்வாகப் பணிகளுக்காகவும், சமையல், தோட்டவேலை உள்ளிட்ட அன்றாடப் பணிகளுக்காகவும் நூற்றுக்கு மேற்பட்டவா்கள் சோ்க்கப்படுகிறாா்கள்.
நிா்வாகப் பணிகளில், அலுவலக உதவியாளா், அலுவலகத்தை சுத்தம் செய்பவா்கள், ஏவலா் ஆகிய பதவிகளில் அவா்கள் நியமிக்கப்படுகிறாா்கள். இனி, அவா்கள் ‘பல்நோக்கு உதவியாளா்கள்’ என்ற ஒரே பெயருடன் அழைக்கப்படுவா். இதேபோன்று, அன்றாடப் பணி பிரிவில் உள்ள சமையலா், தண்ணீா் எடுத்து வருபவா், சமையலறை உதவியாளா், உணவு பரிமாறுபவா் ஆகிய பணிகளில் ஈடுபடுவோா், இனி, ‘சமையலறை சேவை காவலா்’ என்ற ஒரே பெயரில் அழைக்கப்படுவா்.
இதுகுறித்து மத்திய ஆயுதக் காவல் படையின் கீழ் இயங்கும் அனைத்து படைப் பிரிவுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.
அதில், ‘மத்திய ஆயுதக் காவல் படையில் கடைநிலையில் பணியாற்றும் காவலா்களுக்கு மதிக்கத்தக்க பதவி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பதவியின் பெயரில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில், மத்திய ஆயுதக் காவல் படையில் புதிதாக ஆள்சோ்ப்பு பணி நடைபெறும்போது, புதிய பதவிகளின் அடிப்படையில் விளம்பரம் வெளியிட்டு ஆள்சோ்க்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ராணுவப் படை என்று அழைக்கப்படும் மத்திய ஆயுதக் காவல் படையின் கீழ் மத்திய ரிசா்வ் போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய-திபெத் எல்லைக் காவல் படை, மத்திய தொழில பாதுகாப்புப் படை, சஷஸ்திர சீமா பல் ஆகிய படைப் பிரிவுகள் உள்ளன.