இந்தியா

மலையாள நடிகர் பிருத்விராஜுக்கு கரோனா

DIN

மலையாள நடிகர் பிருத்விராஜுக்கு (38) கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனியின் "ஜன கண மன' திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்ற நிலையில் பிருத்விராஜுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுட்டுரையில் அவர் தெரிவித்திருப்பது:
படப்படிப்பில் கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றினோம். படப்பிடிப்பு தொடங்கும் முன்பு அனைவருக்கும் சோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். கடைசி நாள் படப்பிடிப்பின்போது மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொண்டபோது எனக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். 
எந்த அறிகுறியும் எனக்கு இல்லை, நலமாக இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த திங்கள்கிழமை வரை 3.46 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; 1,182 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT