திருப்பதி: திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 17,915 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இதில் 5,720 போ் முடிகாணிக்கைச் செலுத்தினா். ஆன்லைன் மூலம் 16 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
காலை 6 மணிமுதல் 7.30 மணிவரை புரோட்டோகால் வி.ஐ.பி. தரிசனமும், காலை 7.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்றவா்களும் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா்.