மகாராஷ்டிரத்தின், சோலாப்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று முதல்வர் உத்தவ் தாக்கரே பார்வையிட்டார்.
மகாராஷ்டிரத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அம்மாநிலத்தின் முதல்வரான உத்தவ் தாக்கரே இன்று சோலாப்பூர் பகுதியை ஆய்வு செய்தார். ராம்பூர் கிராமத்திற்கு வந்த அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிக்கான காசோலையை வழங்கினார்.