இந்தியா

தில்லி: கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் 2 பேர் பலி

DIN

தில்லியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம்செய்தபோது விஷவாயு தாக்கியத்தில் 2 பேர் பலியானார்கள். 

தலைநகர் தில்லியின் ஆசாத் புர் பகுதியில் உள்ள செயின் கம்பெனியில் நேற்று 7 தொழிலாளர்கள் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்துகொண்டிருந்தனர். அப்போது அதில் 6 தொழிலாளர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கம்பெனி உரிமையாளர் ராஜேந்திர சோனி உள்பட இருவரை கைது செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலைச் சமாளிப்பது எப்படி?

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

SCROLL FOR NEXT