தில்லியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம்செய்தபோது விஷவாயு தாக்கியத்தில் 2 பேர் பலியானார்கள்.
தலைநகர் தில்லியின் ஆசாத் புர் பகுதியில் உள்ள செயின் கம்பெனியில் நேற்று 7 தொழிலாளர்கள் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்துகொண்டிருந்தனர். அப்போது அதில் 6 தொழிலாளர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கம்பெனி உரிமையாளர் ராஜேந்திர சோனி உள்பட இருவரை கைது செய்தனர்.