இந்தியா

பாபா ஆம்தே பேத்தி சீதள் ஆம்தே - கராஜ்கி தற்கொலை

IANS


சந்திரபூர்: பாபா ஆம்தேவின் பேத்தியும், புகழ்பெற்ற சமூக ஆர்வலராக அறியப்படும் மருத்துவர் சீதள் ஆம்தே - கராஜ்கி தற்கொலை செய்து கொண்டார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திரபூரில் அமைந்துள்ள ஆனந்தவன ஆசிரமத்தில் திங்கள்கிழமை காலை அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாபா ஆம்தேவுடன் சீதள் ஆம்தே - கராஜ்கி

முதற்கட்ட விசாரணையில், அவர் இன்று காலை, தனக்குத் தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டதாக வரோரா காவல்நிலைய அதிகாரி பி. பென்டார்கர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும், அடுத்தகட்ட விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பென்டார்கர் கூறினார்.

மகசேசே விருது பெற்ற பாபா ஆம்தேவின் பேத்தியான மருத்துவர் சீதள் ஆம்தே - கராஜ்கி தொழுநோயாளிகளுக்காக மிகச் சிறந்த பணியாற்றி வரும் மகாரோகி சேவா சமிதியின் தலைமைச் செயல் அலுவலராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை செய்து கொண்டு பலியான சீதள் ஆம்தே, இந்தப் புகைப்படத்தை தனது சுட்டுரைப் பக்கத்தில் இன்று அதிகாலை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்துக்கு போரும் அமைதியும் என்று அவர் பெயரிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT