அலகாபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சங்கீதா ஸ்ரீவஸ்சவா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பல்கலையில் முதல் பெண் துணைவேந்தர் இவராவார்.
இவர் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது நிரந்தர துணைவேந்தர் ஆவார். கடந்த 1989-இல் இவர் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். அந்த நேரத்தில், அறிவியலில் உயிர் வேதியியல் துறை ஒரு பகுதியாக இருந்தது.
அவரது முயற்சியின் காரணமாக, உள்துறை அறிவியல்(home science) துறைக்கு 2002-ஆம் ஆண்டில் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதன் தலைவராக அவர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.