கேரளத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று ஒரே நாளில் 5643 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 4951 பேருக்கு தொடர்பின் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,99,600ஆக உயர்ந்துள்ளது.
இன்று மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 2,223 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று ஒரேநாளில் 5,861 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,32,658 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 64,589 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒநே நாளில் 62,27,787 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.