கோபால்கஞ்ச்: பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சி எம்எல்ஏ அமரேந்திர பாண்டேவின் உதவியாளர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிகார் மாநிலம் கோபால்கஞ்சியில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அமரேந்திர பாண்டேவின் உதவியாளர் சனிக்கிழமை மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிகாரில் ஆட்சி அமைந்த சில நாள்களிலேயே எம்எல்ஏவின் உதவியாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் மாநிலத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.