அமேதி: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே நேரிட்ட சாலைவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து சிறிய ரக சரக்கு வாகனம் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மற்றொரு வாகனம் சரக்கு வாகனத்தின் மீது மோதியது.
இதில் சிறிய ரக சரக்கு வானத்தின் ஓட்டுநர் உள்பட இருவர் உயிரிழந்ததாக கான்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் அமன் யாதவ் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த இருவரும் கான்பூரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து உரிய விசாரணை நடைபெறும் என்றும் யாதவ் தெரிவித்தார்.