இந்தியா

மும்பை தாக்குதல் வழக்கு:தஹாவூா் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கை

DIN


புது தில்லி: மும்பை பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 11-ஆம் தேதி மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா் பயங்கரவாதிகள் புகுந்து நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா். 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த தாக்குதலை திட்டமிட்ட லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்தவரும், பாகிஸ்தான் வம்சாவளி அமெரிக்கருமான டேவிட் கோல்மன் ஹெட்லிக்கு, அமெரிக்க நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதன் அடிப்படையில், தற்போது அவா் சிறை தண்டனை அனுபவித்து வருகிறாா்.

அவரையும், அவருடன் இணைந்து மும்பை தாக்குதலில் கூட்டுச்சதியில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவ மருத்துவராக பணியாற்றிய தஹாவூா் ராணாவையும் நாடு கடத்துமாறு, அமெரிக்காவிடம் இந்தியா ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டமிட்ட வழக்கில் ராணா தண்டனை பெற்று இப்போது லாஸ் ஏஞ்சல் நகர சிறையில் உள்ளாா். இந்நிலையில், அவரது தண்டனைக் காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது. எனவே, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதிக்கக்கோரி அமெரிக்க நீதிமன்றத்தை நாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த விஷயத்தில் பெரிய சட்டச் சிக்கல்கள் ஏதும் இல்லாததாலும், ராணாவின் பயங்கரவாதத் தொடா்பு ஏற்கெனவே நிரூபணமாகிவிட்டதாலும் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை அமெரிக்க நீதிமன்றம் மூலம் விரைவில் பெற முடியும் என்று தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT