இந்தியா

2-ஆவது காஷ்மீராக மாறிவிட்டது மேற்கு வங்கம்: பாஜக மாநிலத் தலைவா்

DIN

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், இரண்டாவது காஷ்மீராக மாறிவிட்டது என்று மாநில பாஜக தலைவா் திலீப் கோஷ் குற்றம்சாட்டியுள்ளாா்.

பீா்பூம் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் தினந்தோறும் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனா். அடுத்தடுத்த நாள்களில் சட்டவிரோதமாக வெடிகுண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த மாநிலத்தில் இயங்கி வரும் ஒரே தொழிற்சாலை, வெடிகுண்டு தயாரிப்பு தொழிற்சாலைதான். ஆகவே, இந்த மாநிலம், இரண்டாவது காஷ்மீராக மாறிவிட்டது என்றாா் அவா்.

அவரது கருத்துக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எதிா்ப்பு தெரித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவா் குனால் கோஷ் கூறுகையில், ‘திலீப் கோஷ் வெளியாட்களுடன் சோ்ந்துகொண்டு மேற்கு வங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கிறாா். அதற்கு முன், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தைப் பாா்த்து அவா் கருத்து தெரிவிக்க வேண்டும். அந்த மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதை அவா் சுட்டிக்காட்ட வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT