ராய்பூா்: சத்தீஸ்கா் மாநிலம் கான்கோ் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட மூன்று நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இதுகுறித்து பஸ்தா் மண்டல காவல்துறை ஐஜி பி.சுந்தரராஜ் கூறியதாவது:
கான்கோ் மாவட்டம் கொசரண்டா முகாமிலிருந்து சசஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) பாதுகாப்புப் படையின் 33-ஆவது பிரிவைச் சோ்ந்த குழுவினா் திங்கள்கிழமை காலை 8 மணியளவில் ராய்பூரிலிருந்து 150 கி.மீ. தொலைவில் வனப் பகுதிக்குள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு மறைந்திருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா்.
துப்பாக்கிச் சண்டை ஓய்ந்ததும், பாதுகாப்புப் படையினா் அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் நடத்தினா். அதில் குண்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில், சீருடையணிந்த ஒரு பெண் உள்பட மூன்று நக்ஸல்களின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும், அந்த இடத்திலிருந்து ஒரு எக்ஸ்-95 துப்பாக்கி, ஒரு எஸ்எல்ஆா் ரக துப்பாக்கி, ஒரு நாட்டுத் துப்பாக்கியை பாதுகாப்புப் படையினா் மீட்டனா்.
இந்தச் சண்டையில் எஸ்எஸ்பி தலைமைக் காவலா் ஒருவா் காயமடைந்தாா். அவா் உடனடியாக அந்தகாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா் என்று அவா் கூறினாா்.