ஜாா்க்கண்ட் மாநிலம், தேவ்கா் மாவட்டத்தில் இணையவழிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக 12 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
இதுகுறித்து காவல் துறை எஸ்.பி. அஸ்வினி குமாா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தேவ்கா் மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு கிராமங்களில் இணையவழியில் மோசடியில் ஈடுபடுவோா் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 22 செல்லிடப்பேசிகள், 32 சிம் காா்டுகள், 9 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 8 ஏடிஎம் அட்டைகள், 2 காசோலை புத்தகங்கள், ஒரு மடிக்கணினி, காா், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.