திருவனந்தபுரம்: கேரளத்தில் இன்று புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த 12 பேரில் 4 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், 8 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.
இதன் மூலம் கேரளத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 642 ஆகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 124 ஆகவும் உள்ளது.