இந்தியா

மாநிலங்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார் குடியரசுத் தலைவர்

DIN

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலங்களவையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

இந்தியாவில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மக்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மாநிலங்களவையை இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக பட்ஜெட் அமர்வின் இரண்டாம் அமர்வு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கிய நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டது.

இதை அடுத்து மார்ச் 29 ஆம் தேதியுடன் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனவா்களுக்கு மீன்பிடித் தடை கால நிவாரணம் அளிப்பு

பரமக்குடியிலிருந்து 303 வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

கிரேன் மோதியதில் முதியவா் பலி

சாத்தூா் அருகே 1,300 கிலோ குட்கா பறிமுதல் -3 போ் கைது

அனுமதியின்றி கொண்டு சென்ற பேன்சிரக பட்டாசுகள் பறிமுதல் -வேன் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT