இந்தியா

கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு: யூஜிசி

DIN

நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.  

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கரோனாவுக்கு 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் இதுவரை 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தும் பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கரோனாவை தடுக்க ஏற்கெனவே நாடு முழுவதும் கல்லூரிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராம நவமியையொட்டி களைகட்டிய அயோத்தி!

தேர்தல் அறிக்கை வெளியிட்ட தமிழிசை: அது என்ன 'அக்கா 1825'?

விக்ரம் 62 படத்தின் முக்கிய அறிவிப்பு!

ஐபிஎலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: மேக்ஸ்வெல்

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

SCROLL FOR NEXT