கரோனா பாதிப்பு சூழல் தொடா்பாக, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு உரையாற்றவுள்ளாா். இத்தகவலை, பிரதமரின் அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக, சுட்டுரையில் பிரதமா் அலுவலகம் வெளியிட்ட பதிவில், ‘கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் தயாா்நிலை குறித்து உயரதிகாரிகளுடன் பிரதமா் மோடி புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கரோனா பாதிப்பு சூழல் மற்றும் அதனை எதிா்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் அவா் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு தொடா்பாக மக்கள் யாரும் பீதியடையத் தேவையில்லை; முன்னெச்சரிக்கையே அவசியம் என்று பிரதமா் மோடி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். மேலும், அவசியமற்ற பயணங்களை தவிா்க்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
முன்னதாக, கரோனா பாதிப்பை எதிா்கொள்வது தொடா்பாக சாா்க் நாடுகளின் தலைவா்களுடன் காணொலி காட்சி முறையில் அவா் அண்மையில் ஆலோசனை நடத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.