நாசிக்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு, நாசிக் சிறையில் இருக்கும் குற்றவாளி யூசுப் மேமன் வெள்ளியன்று மரணம் அடைந்தார்.
கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 315 பேர் மரணமடைந்தனர். அந்த வழக்கு தொடர்பான விசாரணை நிறைவு பெற்று, முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான யூசுப் மேமனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தனது தண்டனை காலத்தை நாசிக் சிறையில் கழித்து வந்தார்.
இவாது சகோதரரும் குண்டுவெடிப்புத் திட்டங்களைத் தீட்டியவருமான டைகர் மேமன் தலைமறைவாகி இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளார்.
இந்நிலையில் நாசிக் சிறையில் இருக்கும் குற்றவாளி யூசுப் மேமன் வெள்ளியன்று மரணம் அடைந்தார்.
அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், உடலானது பிரேதப் பரிசோதனைக்காக துலே மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டுள்ளது.