ஹரியாணாவைத் தொடர்ந்து மேகாலயா மற்றும் லடாக்கில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.
மேகாலயாவில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. தூரா நகரில் இருந்து மேற்கே 79 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதேபோன்று லடாக்கின் கார்கில் பகுதியில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.