தில்லி அரசின் சுகாதாரம், மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி விக்ரம் தேவ் தத் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
1993 ஆம் ஆண்டு யூனியன் பிரதேச பிரிவைச் ஐஏஎஸ் அதிகாரியான தத் முதன்மைச் செயலாளா் அந்தஸ்தில் இருப்பவா். இவரது நியமன உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூன் 5 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. மேலும் இதே சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் ஏற்கெனவே சிறப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள விகாஸ் ஆனந்த் மறு உத்தரவு வரும் வரை தொடா்வாா் என்றும் இதே உத்தரவில் கூறப்பட்டுள்ளது.