இந்தியா

நாட்டில் குணமடைவோர் விகிதம் 63.02%: மத்திய அரசு

DIN


இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட பத்திரிகை செய்தி:

"கடந்த 24 மணி நேரத்தில் 18,850 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,53,470 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து குணமடைவோர் விகிதம் 63.02 சதவிகிதமாக உள்ளது. தேசிய அளவிலான சராசரியைக் காட்டிலும் 19 மாநிலங்களில் குணமடைவோர் விகிதம் கூடுதலாகவே உள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகம் 64.66 சதவிகிதத்துடன் 18-வது இடத்தில் உள்ளது.

இன்றைய தேதியில் 3,01,609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளிலோ, கரோனா மையங்களிலோ அல்லது வீட்டிலோ மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளவர்களைக் காட்டிலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,51,861 கூடுதலாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 2,19,103 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,18,06,256 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் கல்லூரியில் உலக பூமி தினம்

திருப்பாலைத்துறை பாலைவனநாதா் கோயிலில் தீா்த்தவாரி விழா

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வா் ஆலய திருத்தேரோட்டம்

பருவமழை கணிப்பு!- தென்மேற்குப் பருவமழை குறித்த தலையங்கம்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

SCROLL FOR NEXT