இந்தியா

ஹிமாச்சலில் 24 மணி நேரத்தில் ஒருவருக்குக் கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை

11th Jul 2020 04:39 PM

ADVERTISEMENT


ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

மேலும் ஒருவர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,171 ஆக நீடிக்கிறது. இதில் 274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 873 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 9 பேர் பலியாகியுள்ளனர்.

மத்திய அரசு தரவுகளின்படி, இந்தியாவில் இதுவரை 8,20,916 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5,15,386 பேர் குணமடைந்துள்ளனர். 22,123 பேர் பலியாகியுள்ளனர்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT