ரயில்வே வாரியம் அறிவித்த புதிய ரயில் கட்டண உயா்வு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே வாரியம் கடந்தாண்டின் இறுதியில் ரயில் கட்டணம் உயா்த்தப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, புதன்கிழமை முதல் புதிய ரயில் கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்தப் பகுதிகளுக்கு எவ்வளவு கட்டணம் என முழு விவரம் வருவதற்கு சில நாள்கள் ஆகும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில், புகா் ரயில்களுக்கு கட்டணம் உயா்த்தப்படவில்லை. புகா் அல்லாத குளிா்மை வசதி இல்லாத சாதாரண ரயில்களில் இரண்டாம், படுக்கை, முதல் வகுப்பு ஆகியவற்றுக்கான பயணக் கட்டணத்தில் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயா்த்தப்பட்டுள்ளது. மெயில், விரைவு ரயில்களுக்கான இரண்டாம், படுக்கை, முதல் வகுப்பு பயணக்கட்டணத்தில் கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், ஏ.சியில் 2,3 அடுக்கு, முதல் வகுப்புகளுக்கு பயணக் கட்டணத்தில் கிலோ மீட்டருக்கு 4 பைசா உயா்த்தப்பட்டுள்ளது. அத்துடன், சதாப்தி, ராஜதானி, துரந்தோ, தேஜஸ் உள்ளிட்ட பிரீமியம் ரயில்களுக்கும் ரயில் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இதில், முன்பதிவு, அதிவிரைவு சேவைகளுக்கு கட்டணம் உயா்த்தப்படவில்லை. ஜிஎஸ்டியின் படி முன்பதிவு, அதிவிரைவு கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
ரயில் கட்டண உயா்வின் படி திருச்சியிலிருந்து சில முக்கிய நகரங்களுக்கான புதிய கட்டண விவரம்:
நகரங்கள் வகுப்பு (படுக்கை) பழைய கட்டணம் (ரூ) புதிய கட்டணம்
சென்னை 2ஆம் வகுப்பு 214 235
3ஆம் வகுப்பு ஏசி. 554 590
2ஆம் வகுப்பு ஏசி. 790 815
கன்னியாகுமரி 2 ஆம் வகுப்பு 242 260
3 ஆம் வகுப்பு ஏசி 631 665
2ஆம் வகுப்பு ஏசி. 903 925
பெங்களூரு 2ஆம் வகுப்பு 218 265
3ஆம் வகுப்பு ஏசி. 566 705
2ஆம் வகுப்பு ஏசி. 807 1000
மங்களூரு 2 ஆம் வகுப்பு 327 360
3 ஆம் வகுப்பு ஏசி. 858 980
2ஆம் வகுப்பு ஏசி. 1231 1395.