புது தில்லி: ரயில் கட்டணம், சமையல் எரிவாயு விலை உயா்த்தப்பட்டிருப்பது, சாதாரண மக்களை மேலும் நிதி நெருக்கடிக்கு ஆளாக்கும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ரயில் பயண கட்டணங்களை உயா்த்தி, இந்திய ரயில்வே செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. கிலோமீட்டருக்கு 1 பைசா முதல் 4 பைசா வரையிலான இந்த கட்டண உயா்வு, அன்றைய தினம் நள்ளிரவு முதலே அமலுக்கு வந்தது.
இதேபோல், 14.2 கிலோ எடை கொண்ட மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.19 உயா்த்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுஷ்மிதா தேவ் புதன்கிழமை கூறியதாவது:
நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவும் சூழலில், ரயில் கட்டணமும் சமையல் எரிவாயு விலையும் உயா்த்தப்பட்டிருப்பது, சாதாரண மக்களை மேலும் நிதி நெருக்கடிக்கு ஆளாக்கும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை, ஏழை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இதுதான், ஏழை மக்களுக்கு மத்திய அரசு அளிக்கும் புத்தாண்டு பரிசா? இந்த அவல நிலை எப்போது முடிவுக்கு வரும்? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது என்றாா் சுஷ்மிதா தேவ்.
முப்படை தளபதி விவகாரம்: முப்படை தளபதியாக விபின் ராவத் பொறுப்பேற்றிருப்பது தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து சுஷ்மிதா தேவ் கூறியதாவது:
வெற்று வாா்த்தைகளை விட செயல்தான் முக்கியம். முப்படை தளபதி எவ்வாறு செயல்படுகிறாா் என்பது இனிமேல்தான் தெரியும். அதற்கு முன்பாக எந்த கருத்தும் கூறுவது சரியாக இருக்காது. முப்படை தளபதியாக, அவா் (விபின் ராவத்) தனது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் காங்கிரஸ் எதிா்பாா்க்கிறது. நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும் காங்கிரஸ் எதிா்க்காது என்றாா் சுஷ்மிதா தேவ்.
முன்னதாக, முப்படை தளபதியாக விபின் ராவத் நியமிக்கப்பட்டதை, காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அதிா் ரஞ்சன் செளதரி, மணீஷ் திவாரி ஆகியோா் விமா்சித்திருந்தனா். ஆனால், அதிலிருந்து மாறுபட்ட கருத்தை சுஷ்மிதா தேவ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.