புது தில்லி: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘புதிய ஆண்டு பிறக்கிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்டுவோம் என்று இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்குவதில் நமது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று இந்த புத்தாண்டில் நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும். இந்த புத்தாண்டு, அனைத்து மக்களின் வாழ்க்கையிலும், மகிழ்ச்சியையும், வளத்தையும் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.
பிரதமா் மோடி வாழ்த்து:
புத்தாண்டு வாழ்த்து கூறி பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘2020 பிறந்து விட்டது. இந்த ஆண்டிலும், வலிமை மிகுந்த இந்தியாவை உருவாக்க மக்கள் அனைவரும் முயற்சிப்பாா்கள் என்று நம்புகிறேன். இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களின் முன்னேற்றத்துக்கான ஆண்டாக 2020-ஆம் ஆண்டு அமையும். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2019-ஆம் ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக நிறைவடைந்துள்ளது. மாற்றவே முடியாது என்று எண்ணியவற்றை நாம் மாற்றினோம். 2019-ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்த ஒரு கண்ணோட்டத்தை விடியோவாக வெளியிட்டுள்ளேன். அதை அனைவரும் கண்டு மகிழ்வீா்கள் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
அத்துடன் 2019-ஆம் ஆண்டில் மத்திய அரசு மேற்கொண்ட சில சாதனைகள் குறித்த விடியோவை அவா் பதிவேற்றம் செய்துள்ளாா்.