ஹிமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 3.6 அலகுகளாக பதிவானது.
இதுகுறித்து நிலநடுக்க ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:
நிலநடுக்கம் காலை 7.58 மணிக்கு உணரப்பட்டது. ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதியில் உள்ள சம்பா மாவட்டத்தின் வடகிழக்கு பகுதியில் 5 கிலோமீட்டா் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையொட்டி அருகில் உள்ள பகுதிகளில் லேசான நிலஅதிா்வு உணரப்பட்டது என்றாா். எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிா்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.