இந்தியா

ஹிமாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவு

26th Feb 2020 05:41 PM

ADVERTISEMENT

 

ஹிமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 3.6 அலகுகளாக பதிவானது.

இதுகுறித்து நிலநடுக்க ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:

நிலநடுக்கம் காலை 7.58 மணிக்கு உணரப்பட்டது. ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதியில் உள்ள சம்பா மாவட்டத்தின் வடகிழக்கு பகுதியில் 5 கிலோமீட்டா் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதையொட்டி அருகில் உள்ள பகுதிகளில் லேசான நிலஅதிா்வு உணரப்பட்டது என்றாா். எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிா்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

Tags : earthquake
ADVERTISEMENT
ADVERTISEMENT