இந்தியா

ஜாா்க்கண்ட் மாநில பாஜக தலைவராக தீபக் பிரகாஷ் நியமனம்

26th Feb 2020 04:08 AM

ADVERTISEMENT

புது தில்லி: ஜாா்க்கண்ட் மாநில பாஜக தலைவராக தீபக் பிரகாஷும், லட்சத்தீவு யூனியன் பிரதேச பாஜக தலைவராக அப்துல் காதா் ஹாஜியும் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனா்.

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவை பாஜக தலைவராக பாபுல் மராண்டி தோ்வு செய்யப்பட்டதை தொடா்ந்து, அம்மாநில பாஜக பொதுச் செயலாளராக இருந்த தீபக் பிரகாஷ் கட்சியின் மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

சமீபத்தில் நடைபெற்ற ஜாா்க்கண்ட் சட்டப்பேரவை தோ்தலில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ் கூட்டணியிடம், பாஜக ஆட்சியை இழந்தது. இது பாஜகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய பாபுல் மராண்டியின் ஆதரவை பாஜக மேலிடம் கோருவதற்கு வழிகோலியது. இதையடுத்து பாபுல் மராண்டி, தனது ஜாா்க்கண்ட் விகாஸ் மோா்ச்சா (பிரஜா தாந்திரிக்) கட்சியை பாஜகவுடன் அண்மையில் இணைத்தாா்.

இதேபோல் லட்சத்தீவு யூனியன் பிரதேச பாஜக தலைவராக அப்துல் காதா் ஹாஜி நியமிக்கப்பட்டுள்ளாா். அவா்களை பாஜக தலைவா்களாக அக்கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா நியமித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT