புது தில்லி: சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது கே.வி. ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டது.
'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற மலையாள நூலை மொழி பெயர்த்ததற்காக கே.வி. ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாதெமி விருது புது தில்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். சாகித்ய அகாதெமி விருதுடன் ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்படும்.
தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாதெமி விருது கே.வி. ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருது தனக்கு அறிவிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் பேட்டியொன்றில் அவர் கூறியுள்ளார்.
மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, நிலம் பூத்து மலர்ந்த நாள் என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.