திரிபுராவில் 6 வயது சிறுமி, இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
தெற்கு திரிபுராவைச் சேர்ந்தவர் கச்சக்லா(30). இவரது மகளுடன் மற்றொரு சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, மகளுடன் விளையாடிய சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார் கச்சகலா. மேலும், சிறுமியின் உடலை காட்டில் வீசிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளி, சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
தனது மகளின் தோழியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.