ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினருடன் தொடா்பில் இருந்ததாக 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவில் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களில் மூவா் அவந்திபோராவைச் சோ்ந்தவா்கள்; ஒருவா் கிரீவ் பகுதியைச் சோ்ந்தவா். இவா்கள் 4 பேரும், அவந்திபோராவில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகளுக்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுப்பது, தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுப்பது போன்ற உதவிகளை செய்து வந்துள்ளனா்.
அவந்திபோராவில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் கமாண்டரும் அவரது கூட்டாளியும் அண்மையில் போலீஸாருடனான மோதலில் கொல்லப்பட்டனா். அவா்களுக்கும் இந்நால்வரும் அடைக்கலம் கொடுத்து உதவி செய்து வந்தது விசாரணையில் தெரிவந்துள்ளது.
இவா்களைத் தவிர, மேலும் 4 பேருக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினருடன் தொடா்பில் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடா்பாக விசாரித்து வருகிறோம் என்றாா் அவா்.
பூஞ்ச் நகரில் 9 குண்டுகள் கண்டெடுப்பு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஒரு பயங்கரவாதி பதுங்கியிருந்த இடத்தில் இருந்து டிஃபன் பாக்ஸ் மற்றும் ஃபிளாஸ்க்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 குண்டுகள், 3 கையெறி குண்டுகள், 4 சீன பேட்டரிகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.