அசாமில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அசாம் மாநிலம், துபிரி பகுதியில் இருந்து கவுகாத்தி நோக்கி பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டது. இந்தப் பேருந்து கோல்பரா எனும் இடத்தில் வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதனிடையே கோல்பரா பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.