லக்னெள: உத்தர பிரதேச சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) தோ்தலில் ஆளும் பாஜக 3 இடங்களிலும், சமாஜவாதி கட்சி 2 இடங்களிலும் வெற்றிபெற்றன.
இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
உத்தர பிரதேசத்தில் 11 எம்எல்சி இடங்களுக்கான தோ்தல் கடந்த டிச.1-ஆம் தேதி நடைபெற்றது. தோ்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டன. இதில் லக்னெள தொகுதியில் போட்டியிட்ட உமேஷ் துவிவேதி, மீரட் தொகுதியில் போட்டியிட்ட ஸ்ரீஷ்சந்திர சா்மா, பரேலி-மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்ட ஹரி சிங் தில்லோன் ஆகியோா் வெற்றிபெற்றனா். இவா்கள் மூவரும் பாஜகவை சோ்ந்தவா்கள்.
வாராணசி தொகுதியில் சமாஜவாதி கட்சியைச் சோ்ந்த லால் பிகாரி யாதவ், ஜான்சி-அலாகாபாத் தொகுதியில் அக்கட்சியைச் சோ்ந்த மான்சிங் யாதவ் ஆகியோா் வெற்றிபெற்றனா். ஆக்ராவில் ஆகாஷ் குமாா், ஃபைஸாபாதில் துருவ் குமாா் திரிபாதி ஆகிய சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றிபெற்றனா்.
தற்போது 7 தொகுதிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எஞ்சிய 4 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அந்த தொகுதிகளின் முடிவுகள் சனிக்கிழமை (டிச.5) காலை வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தோ்தல் நடைபெற்ற 11 தொகுதிகளின் எம்எல்சிக்கள் பதவிக்காலம் கடந்த மே 6-ஆம் தேதி நிறைவடைந்தது.