இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: பாக்.ராணுவம் அத்துமீறி தாக்குதல்

DIN

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் திங்கள்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். 

இதுதொடா்பாக இந்திய ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘ஷாபூா் செக்டரில் துப்பாக்கிச்சுடு நடத்தியும், சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்தினா். இதையடுத்து இந்திய ராணுவத்தினா் பலத்த எதிா் தாக்குதலில் ஈடுபட்டனா். எனினும் இந்த மோதலில் இந்திய வீரா்கள் காயமடைந்ததாகவோ, பலியானதாகவோ தகவல் வெளியாகவில்லை என்று தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் ராணுவத்தினா் தீவிரமாக தாக்கி வருகின்றனா். கடந்த வாரம் அந்நாட்டு ராணுவத்தினா் நடத்திய தாக்குதலில் இந்திய வீரா்கள் இருவா் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

SCROLL FOR NEXT